மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு? அடிப்படை ஊதியத்துடன் 53% அகவிலைப்படி இணைக்கப்படுமா?

7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படியை இணைத்தால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 14, 2024, 11:16 AM IST
  • அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?
  • அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்?
  • முந்தைய சம்பள கமிஷன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு? அடிப்படை ஊதியத்துடன் 53% அகவிலைப்படி இணைக்கப்படுமா?

7th Pay Commission: டிஏ எனப்படும் அகவிலைப்படி என்பது இந்திய அரசாங்கத்தின் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான நன்மையாகும். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்திலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. சமீபத்தில், மோடி அரசு  அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நன்மையை செய்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

இதைத் தொடர்ந்து பல தரப்பிலிருந்து ஒரு முக்கிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? இதற்கான விதி என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees: அகவிலைப்படி

அகவிலைப்படி என்பது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் ஒரு முக்கியமான கொடிப்பனவு. பணவீக்கம், விலைவாசி, மாறும் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ப இதில் மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த கொடுப்பனவு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஒரு நிலையான சதவீதமாகும், இது அவர்களின் வாங்கும் திறனை பராமரிக்க உதவுகிறது.

ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் (AICPI Index) அடிப்படையில், ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கபப்டுகின்றன. 

சமீபத்தில், ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக அதிகரித்துள்ளன. 

Dearness Allowance: அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்?

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படியை இணைத்தால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வருவதோடு, அகவிலைப்படியின் அடிப்படையில் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவார்கள்.

இது தவிர, இந்த மாற்றம் ஊழியர்களின் கொடுப்பனவுகள், போனஸ், ஓய்வூதியம் மற்றும் பிற அலவன்சுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை அனைத்தும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது ஊழியர்களின் மொத்த வருமானத்தை கணிசமாக அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்பு

DA Merger: அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?

2025 ஜனவரியில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, தற்போது உயர்த்தப்பட்ட டிஏ (DA) ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்பது தொடர்பான பேச்சுக்கள் இப்போது தீவிரமடைந்துள்ளன. அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். அக்டோபர் 16 அன்று, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. உயர்வுக்குப் பிறகு, அடிப்படை ஊதியத்துடன் டிஏவை இணைப்பது குறித்து விவாதம் தொடங்கியது.  

Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகச் சிந்தித்து, ஊழியர்களின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்தால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும்.

முந்தைய சம்பள கமிஷன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன

6வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி 50% க்கு மேல் சென்றபோது, ​​​​அதை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கும் யோசனை எழுப்பப்பட்டது. 2004 இலும், அகவிலைப்படி 50% ஐ எட்டியபோது, ​​​​அது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டது. இருப்பினும், பின்னர் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அது பிரிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவிலும் (7th Pay Commission) இதே நிலை ஏற்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் நிரந்தர மாற்றம் ஏற்படும். இது அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொடுப்பனவு, போனஸ் மற்றும் ஓய்வூதியம் போன்ற பிற நன்மைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அகவிலைப்படி 50% -ஐத் தாண்டினால், அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படலாம் என்ற ஒரு வசதி உள்ளது. எனினும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News