7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்!

கடந்த 2016ல் 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Aug 6, 2022, 08:06 AM IST
  • ஃபிட்மென்ட் ஃபேக்டரின் அடிப்படையில் ஊதிய முறைகள் வடிவமைக்கப்பட்டது.
  • புதிய ஊதிய மெட்ரிக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஊழியர்களின் சம்பளம் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • தற்பொழுது ​​பதவி உயர்வு மற்றும் அதிகரிப்புக்கு ஒரு புதிய ஃபார்முலா அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்! title=

மத்திய அரசு அதன் ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மதிப்பீட்டு விதிகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 2016 ஆம் ஆண்டில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வெவ்வேறு நிலைகளில் பணிபுரிய வெவ்வேறு ஊதிய மெட்ரிக்குகள் பரிந்துரைக்கப்பட்டன.  7வது ஊதியக் குழுவை அடிப்படையாகக் கொண்ட ஃபிட்மென்ட் ஃபேக்டரின் அடிப்படையில் ஊதிய முறைகள் வடிவமைக்கப்பட்டது.  இந்த புதிய ஊதிய மெட்ரிக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஊழியர்களின் சம்பளம் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.  

இதனையடுத்து தற்பொழுது ​​பதவி உயர்வு மற்றும் அதிகரிப்புக்கு ஒரு புதிய ஃபார்முலா அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.  ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது தானாக பதவி உயர்வு பெறும் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம் என்றும் ஊழியர்களின் தரம் தானாகவே மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!

இதுகுறித்து அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சங்கத்தின் முன்னாள் உதவி பொதுச்செயலாளர் ஹரிசங்கர் திவாரி கூறுகையில், ஊதிய குழு நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்நிலையில் ஊழியர்களின் பதவி உயர்வுகளை நிர்வகிக்க அரசாங்கம் ஒரு புதிய முறையை வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  கடந்த 2016ல் 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழு எப்போது அமல்படுத்தப்படும் என்று ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  ஆனால் 8-வது ஊதியக் குழு அமைக்கப்போவதாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News