விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு? அரசு ஊழியர்களுக்கு பெரும் சம்பள உயர்வு!

8th Pay Commission: மத்திய அரசு 7-வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, 8-வது ஊதியக் குழுவை அமைக்கப்போவதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 22, 2023, 10:14 AM IST
  • தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது.
  • 7-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்காக உள்ளது.
  • 8-வது ஊதியக் குழுவின் மூலம் ஊழியர்களின் சம்பளம் 44.44% உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு? அரசு ஊழியர்களுக்கு பெரும் சம்பள உயர்வு! title=

8th Pay Commission: மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தியினை வழங்கவுள்ளது, அதாவது அரசு 7-வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, 8-வது ஊதியக் குழுவை அமைக்கப்போவதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளது.  அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் உயரும் என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது.  8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு புதிய ஆணையம் பல மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   7-வது ஊதியக் குழுவின் கீழ், தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது, அரசு இந்த சம்பளத்திற்கு ஃபிட்மென்ட் காரணியை அமல்படுத்தியது.  அதே சமயம் இதற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் அதிகரித்து வந்தது, இருப்பினும் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க புதிய கொள்கையை பயன்படுத்த எண்ணினார்.  

மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிடுவதற்காகவே அரசு இந்த ஃபிட்மென்ட் காரணியை செயல்படுத்தியது. 7-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது.  இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக இருந்தது.  மறுபுறம் 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கலாம் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்  ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.  தற்போது ​​8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் மத்திய அரசு 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்றும் இது முழுமையாக அது 2026-ம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் பிரதமர் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு பெரியளவில் பரிசை வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News