8th Pay Commission: அடித்தது ஜாக்பார்ட்! இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 06:16 AM IST
  • மத்திய ஊழியர்களுக்கு இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கபோகிறது.
  • ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.
  • ஃபிட்மென்ட் பேக்டர் தொடர்பான தரவுகளை அரசாங்கம் பரிமாறிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission: அடித்தது ஜாக்பார்ட்! இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வு!  title=

8வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கபோகிறது.  தற்போது பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஊழியர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  ஆனால் அவர்களின் பிரச்சனைக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் நல்ல மாதமாக அமையப்போகிறது.  மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.  ஃபிட்மென்ட் பேக்டர் தொடர்பான தரவுகளை அரசாங்கம் பரிமாறிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ

மத்திய ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஃபிட்மென்ட் பேக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  பழைய அடிப்படை ஊதியத்துடன் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தைக் கணக்கிடுவது அவசியமான ஒன்றாகும்.  ஃபிட்மென்ட் பேக்டர் இப்போது ஊழியர்களிடையே 2.57 மடங்கு விகிதத்தில் விநியோகிக்கப்படுகிறது.  சில செய்திகளின்படி, 6வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதிய அளவு 54 சதவீத சம்பள உயர்வுடன் ரூ.7,000 ஐ எட்டியது, மேலும் ஃபிட்மென்ட் பேக்டர் 1.86 மடங்காக இருந்தது.  இதற்கு நேர்மாறாக 7வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது, அப்போது ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 மடங்கு மற்றும் ஊதிய உயர்வு 14.29 சதவீதம் ஆகும். 8வது ஊதியக் குழுவில் உள்ள ஃபிட்மென்ட் பேக்டர் 3.68 மடங்கு அதிகமாக இருந்தால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும்.

ஒரு அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 எனில், அதில் அலவன்ஸ்களைக் கழித்த பிறகு, அவருடைய ஊதியம் ரூ.18,000 X 2.57 அல்லது ரூ.46,260 ஆக இருக்கும்.  அதேசமயம் ஃபிட்மென்ட் பேக்டர்  3.68 ஆக இருக்கும்போது ஊதியம் ரூ.26000 X 3.68 = ரூ.95,680 ஆக இருக்கும்.  இதனை லெவல்-1 ஊழியர்கள் ரூ.49,420 பலனைப் பெறுவார்கள் எஎன்று கூறலாம்.  எனவே ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை சம்பளம் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News