Alert...! நிரந்தரமாக மூடப்படும் உள்ளூர் வங்கிகள்; காரணம் என்ன?

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகிய இரண்டு பெரிய வங்கி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம என கூறப்படுகிறது.

Last Updated : Mar 6, 2020, 11:06 AM IST
Alert...! நிரந்தரமாக மூடப்படும் உள்ளூர் வங்கிகள்; காரணம் என்ன? title=

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகிய இரண்டு பெரிய வங்கி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம என கூறப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம் ஆனது 2020 மார்ச் 27 அன்று நடைபெறும் எனவும்ர புதன்கிழமை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மெகாபேங்க் இணைப்புகளை எதிர்த்து இந்த வங்கி வேலைநிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளதாகவும் AIBEA-ன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்கி வேலைநிறுத்த தேதி மற்றும் வங்கி வேலைநிறுத்தத்திற்கு காரணம் குறித்து AIBEA-ன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் தெரிவிக்கையில்., "மோசமான கடன்களின் பெரும் குவியலால் வங்கிகளே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. பொதுத்துறை வங்கிகள் மொத்த மொத்த லாபம் ரூ.150,000 கோடி மோசமான கடன்கள் முதலியவற்றிற்கான மொத்த ஏற்பாடுகள் காரணமாக, மார்ச் 31, 2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கு, 216,000 கோடி ரூபாய், வங்கிகள் நிகர இழப்பில் ரூ.66,000 கோடி முடிந்தது.

இத்தகைய சூழலில் வங்கிகளை இணைப்பதன் மூலம் மிகப்பெரிய பெருநிறுவன மோசமான கடன்கள் மீட்கப்படும் என்று யாராவது நம்ப முடியுமா?...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) இணைக்கப்பட்ட பின்னர் நாம் கவனித்தபடி, SBI-யில் மோசமான கடன்கள் அதிகரித்துள்ளன. அதே ஆபத்தை தான் தற்போது இந்த வங்கிகளும் எதிர்கொள்கிறது," என வெங்கடச்சலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்துடன் உச்சகட்டமாக இந்த மாதம் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக வங்க வங்கிகளான AIBOA மற்றும் AIBEA தெரிவித்துள்ளன. இதன் காரணமாக வங்கி வேலைபாடுகள் பரவலாக பாதிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு SBI-யில் பாங்க் ஆப் பரோடா இணைக்கப்பட்ட பின்னர், ஆந்திர வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஆறு வங்கிகளை இணைப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. இந்த பாரிய முயற்சி வங்கிகளை நிரந்தரமாக அடைப்பதற்கான முயற்சி என வங்கி ஊழியர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News