இனி லேசான பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்..!

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது...!

Last Updated : Jun 26, 2020, 07:18 PM IST
இனி லேசான பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்..! title=

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது...!

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் மட்டுமே வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமம் பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது, ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதில் லேசான மற்றும் மிதமான வண்ணப் பார்வைக் குறைபாடு கொண்ட மக்களுக்கு உதவும் வகையில், மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன் FORM 1 மற்றும் FORM 1A-யை திருத்துவதற்கான அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதில், ஜூன் 24 ஆம் தேதி பொது சட்ட விதிகள் 401(E) என்பது அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு எளிதாக்கப்பட்ட சமூக ஒழுங்குமுறை ஆகும். மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து தொடர்பான சேவைகளை பெறவும், குறிப்பாக ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது தொடர்பாகவும் அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்காக சில ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டது.

READ | ஓட்டுநர் உரிமம் அல்லது RC காலாவதியானால் கவலைப்பட வேண்டாம்: முழு விவரத்தை அறிக

உடல் தகுதி (FOR-I) மற்றும் மருத்துவ சான்றிதழ் (FORM-IA) பற்றிய அறிவிப்பில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமையின் காரணத்தால் வண்ணப்பார்வைக் குறைபாடு உள்ள குடிமக்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாது என்ற கோரிக்கைகளை அமைச்சகம் பெற்றது.

இந்த விவகாரத்தை மருத்துவ நிபுணர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆலோசனை பெறப்பட்டது. லேசானது முதல் மிதமான பார்வை வண்ணக்குறைபாடு உடையவர்கள் வானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும், கடுமையான பார்வை வண்ணக் குறைபாடு உடையவர்களை மட்டுமே வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும். என்ற பரிந்துரைகளும் பெறப்பட்டன. இது உலகின் பிற பகுதிகளிலும் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெறவும் வரைவு அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.

Trending News