ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைனில் நொடிகளில் மாற்றுவது எப்படி

நீங்கள் சமீபத்தில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியுள்ளீர்கள் என்றால், உங்கள் ஈபிஎஃப் கணக்கை மாற்ற விரும்புகிறீர்கள் என அர்த்தம். அதை எப்படி பரிமாற்றம் செய்து என்று நீங்கள் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2020, 08:12 AM IST
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைனில் நொடிகளில் மாற்றுவது எப்படி title=

புது டெல்லி: நீங்கள் சமீபத்தில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியுள்ளீர்கள் என்றால், உங்கள் ஈபிஎஃப் கணக்கை மாற்ற விரும்புகிறீர்கள் என அர்த்தம். அதை எப்படி பரிமாற்றம் செய்து என்று நீங்கள் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது நீங்கள் வீட்டிலும் உட்கார்ந்து படியே, இந்த வேலையைச் செய்யலாம். EPFO நிறுவனம், இப்போது EPF பரிமாற்றத்தை ஆன்லைனில் மேற்கொள்ள வசதி செய்துள்ளது. EPFO இந்த 6 படிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் EPF கணக்கை வீட்டிலிருந்து மாற்ற முடியும்.

இந்த 6 படிகள் மூலம் உங்கள் ஈபிஎஃப் கணக்கை மாற்றவும்:

  • ஒருங்கிணைந்த உறுப்பினர் (Unified Member Portal) போர்ட்டலுக்குச் சென்று, யுஏஎன் (UAN) மற்றும் கடவுச்சொல் செலுத்தி உள்நுழைக.
  • ஆன்லைன் சேவைகளுக்குச் (Online services) சென்று, ஒரு உறுப்பினர் ஒரு ஈபிஎஃப் கணக்கு பரிமாற்றக் (EPF Account Transfer) கோரிக்கையை கிளிக் செய்யவும். 
  • நீங்கள் பணிபுரியும் நிறுவனம் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் (Personal information) மற்றும் பிஎஃப் கணக்கை (PF account) சரிபார்க்கவும்.
  • அதன் பிறகு Get Details என்பதைக் கிளிக் செய்க, முந்தைய வேலைவாய்ப்புக்கான வருங்கால வைப்பு நிதி (EPF Information) கணக்கின் தகவல்களை இங்கே பெறுவீர்கள்.
  • படிவத்தை (Attestation) சான்றளிப்பதற்காக பழைய முதலாளி (Employer) அல்லது புதிய முதலாளியைத் தேர்வுசெய்க.
  • UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற, Get OTP ஐக் கிளிக் செய்க.
  • OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி பட்ஜெட்டைக் கிளிக் செய்க.

பிற செய்தி படிக்கவும் | உங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற ஒரு எளிய வழி!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பெரும்பாலான சேவைகளை ஆன்லைனில் செய்து வருகிறது. ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுடன் EPFO ​​பயனடைகிறது. EPFO இலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஊதிய தரவுகளின்படி, செப்டம்பர் 2017 முதல் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஈபிஎஃப்ஒவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2018-19 நிதியாண்டில் 61.12 லட்சமாக அதிகரித்து 2019-20ல் 78.58 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரை மக்களுக்கு மொத்தம் 62 லட்சம் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இது 2018-19 நிதியாண்டில் இருந்ததை விட அதிகம் என்று ஈபிஎஃப்ஒ கூறியுள்ளது.

பிற செய்தி படிக்கவும் | Gratuity எப்படி கணக்கிடுவது? இந்த பார்முலா உங்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க உதவும்

EPFO உறுப்பினர்கள் வேகமாக வளர்ந்து வருகின்றனர்:

ஈபிஎஃப்ஓ 2019-20ஆம் ஆண்டில் 8.5% வரி இல்லாத வட்டியை செலுத்தியது, இது எஃப்.டி அல்லது வேறு எந்த திட்டத்தின் கீழ் உள்ள வட்டியை விட அதிகமாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, ​​2019-20 ஆம் ஆண்டில், EPFO குழுவில் இருந்து விலகப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுமார் 10 சதவீதம் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் EPFO நிறுவனத்தின் முயற்சி ஆகும். பல பணிகளை ஆன்லைன் மூலம் மற்றும் கோரிக்கைகளை விரைவில் தீர்த்து வைப்பதால் தான்.

Trending News