அட்டகாசமான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்: பம்பர் வருமானம் கேரண்டி

Post Office Saving Schemes: இந்த திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அனைத்து அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கும் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 08:30 PM IST
  • தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டம்.
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.
அட்டகாசமான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்: பம்பர் வருமானம் கேரண்டி title=

Post Office Saving Schemes: நாட்டு மக்களுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்து வகுப்பினருக்குமானது. குழந்தைகள், பெண்கள், ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான திட்டங்கள் உள்ளன. அரசின் இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க உதவுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில், சேமிப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு இந்த திட்டங்கள் மிகவும் பொருத்தமான திட்டமாக இருக்கும். 

இந்த திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அனைத்து அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கும் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கிடைக்கும். பணவீக்க விகிதங்களைக் கருத்தில் கொண்டு இந்த வட்டி விகிதங்கள் திருத்தப்படுகின்றன. தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு தொடர் வைப்பு திட்டத்தின் (Recurring Deposit) மீதான வட்டி விகிதங்களை அரசாங்கம் சமீபத்தில் திருத்தியுள்ளது. இந்த திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme)

அரசின் இந்த திட்டத்தில், ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீட்டை வெறும் 1,000 ரூபாயில் தொடங்கலாம். இதற்குப் பிறகு ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. கூட்டுக் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். இதனுடன், நாமினி வசதியும் இதில் உள்ளது. இதற்கான முதலீட்டுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் வட்டியை அரசு வழங்குகிறது. இந்த அரசு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இத்திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட எவரும் கணக்கைத் தொடங்கலாம்.

மகிளா சம்மான் சான்றிதழ் திட்டம் (Mahila Samman Certificate Scheme)

MSSC திட்டம் குறிப்பாக பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் 2 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். அதாவது 2025-ம் ஆண்டு வரை மட்டுமே இந்தத் திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ரூ.2 லட்சம் வரை மொத்தமாக முதலீடு செய்யலாம். 7.5 சதவீத வட்டி இதில் கிடைக்கிறது. கணக்கு தொடங்கி 1 வருடத்திற்கு பிறகு பெண்கள் 40 சதவீத பணத்தை எடுக்கலாம். ரூ.2 லட்சத்தை 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க | EPFO Update: ஊழியர்கள் ஓய்வுக்கு முன்னரே 100% பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit Scheme)

அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதமான வருமானத்தைப் பெறுபவர்களுக்கு சரியானதாகக் கருதப்படுகிறது. அதில் முதலீடு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். RD திட்டத்தில் 100 ரூபாய்க்கு பல முதலீடுகள் செய்யலாம். RD திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு 6.5 சதவிகிதத்திற்கு பதிலாக 6.7 சதவிகிதம் வருடாந்திர வட்டி கிடைக்கும்.

பிபிஎஃப் கணக்கு (PPF Account)

எந்தவொரு தபால் அலுவலகம் அல்லது வங்கிக்கும் சென்று PPF கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கை வெறும் 500 ரூபாயிலும் ஆரம்பிக்கலாம். PPF -இல் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் அதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் 7.1 சதவீத விகிதத்தில் கிடைக்கிறது. ஒருவர் பிபிஎஃப்-ல் ரூ.12,500 முதலீடு செய்தால், அவர் அதை 15 ஆண்டுகளுக்குச் செய்யலாம். முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். அதேசமயம் வட்டி வருமானம் ரூ.18.18 லட்சமாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஒரு சிறப்பு திட்டமாகும். சமீபத்தில், புதிய வரி முறையை அமல்படுத்தி, மூத்த குடிமக்கள் தொடர்பான பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இதில் முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். தற்போது இதற்கான வட்டி 8.2 சதவீதமாக உள்ளது. நிதியமைச்சர் கொடுத்த முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சமாகும். வட்டி விகிதத்தை 8.2 சதவீதமாக உயர்த்தினால், 5 ஆண்டு முதிர்வு காலத்தில் ரூ.12.30 லட்சத்துடன் சேர்த்து மொத்த தொகை ரூ.42.30 லட்சமாக இருக்கும். இது மாத அடிப்படையில் ரூ.20,500 ஆக இருக்கும். இப்போது மூத்த குடிமக்களுக்கு ரூ.20,500 வழங்கப்படும். இது முன்பு ரூ.9,500 ஆக இருந்தது. அரசின் இந்த திட்டத்தில், மூத்த குடிமக்கள் மாதந்தோறும் பணம் பெறுகின்றனர்.

தபால் அலுவலக சேமிப்பு திட்டம் (Post Office Saving Scheme)

தபால் அலுவலக திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். இதில் அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு இல்லை. எந்தவொரு நபரும் எந்த முதியவருடனும் கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் எந்தவொரு மைனர் சார்பாகவும் கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்திற்கு அரசு 4 சதவீதத்துக்கு மேல் வட்டி அளிக்கிறது.

மேலும் படிக்க | Business Idea: லட்சத்தில் வருமானத்தை அள்ளி தரும் ‘கார்ன் பிளேக்ஸ் ’ பிசினஸ் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News