உயர்ந்த சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரிப்பு

சில்லறை பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பரில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2019, 07:00 PM IST
உயர்ந்த சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரிப்பு title=

புதுடில்லி: நாட்டின் பொருளாதார மந்த நிலை காரணமாக மேலும் ஒரு மோசமான செய்தி வந்துள்ளது. உணவு விலைகள் அதிகரித்ததால் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம் 4.62% இலிருந்து 5.54% ஆக உயர்ந்துள்ளது. இது மூன்று மாதங்களில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. தானியங்களின் விலை அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 7.89 சதவீதத்திலிருந்து 10.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62 சதவீதமாக இருந்தது. சில்லறை பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவீதமாக இருந்தது. சில்லறை பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பரில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நவம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் 7.89 சதவீதத்திலிருந்து 10.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற சில்லறை பணவீக்கம் நவம்பரில் 4.29 சதவீதத்திலிருந்து 5.27 சதவீதமாகவும், நகர்ப்புற சில்லறை பணவீக்கம் 5.11 சதவீதத்திலிருந்து 5.76 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.

இருப்பினும், தொழில்துறை உற்பத்தி விகிதம் மேம்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி மத்திய அரசாங்கத்திற்கு ஓரளவுக்கு நிம்மதி தரும். தொழில்துறை உற்பத்தி விகிதம் அக்டோபரில் -3.8 சதவீதமாக இருந்தது -4.3 சதவீதமாக உள்ளது.

வரவிருக்கும் காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று நாணயக் கொள்கையை மறுஆய்வு செய்யும் போது இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் கூறியது. பணவீக்க விகிதத்தை 4% வரம்பிற்குள் வைத்திருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கேட்டுள்ளது. ஆனால் அது 2 சதவீத விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பருப்பு வகைகள் உட்பட உணவுப் பொருட்கள் விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்க விகிதத்தில் மாற்றம் அதிக அளவில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

சரியான நடவடிக்கைகள் மற்றும் நிதி ஊக்கத்தின் மூலம் தனிநபர் துறை மட்டத்தில் முதலீட்டு நம்பிக்கையை அதிகரிப்பதே காலத்தின் தேவை. இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடந்த மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் அதிகரித்து இருப்பது,இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி செல்வதை சுட்டி காட்டுவதாக உள்ளது.

Trending News