எஸ்பிஐ-ன் அசத்தல் திட்டம்! ஒருமுறை முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!

SBI Scheme: எஸ்பிஐயின் வழங்கும் வருடாந்திர வைப்பு திட்டத்தில் நீங்கள் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் டெபாசிட் செய்த பிறகு மாதந்தோறும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.   

Written by - RK Spark | Last Updated : May 9, 2023, 01:01 PM IST
  • எஸ்பிஐ ஒரு சிறப்பான வருடாந்திர வைப்புத் திட்டத்தை வழங்கி வருகிறது.
  • வருடாந்திர வைப்பு திட்டத்தில் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 36, 60, 84 அல்லது 120 மாதங்களுக்கு முதலீடு செய்து கொள்ளலாம்.
எஸ்பிஐ-ன் அசத்தல் திட்டம்! ஒருமுறை முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! title=

SBI Scheme: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மக்களின் நம்பிக்கைக்குரிய வங்கியாகக் கருதப்படுகிறது.  கோடிக்கணக்கான மக்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர், பெரும்பாலான மக்கள் எஸ்பிஐ வழங்கும் பல்வேறு திட்டங்களில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்து பயன் பெற்று வருகின்றனர், இந்தத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது.  மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்பது சிலருக்கு சௌகரியம் இல்லாத ஒன்றாக இருக்கலாம் அல்லது சிலர் ஒருமுறை முதலீட்டிலேயே வருமானத்தை பெற வேண்டும் என்று நினைக்கலாம்.  அப்படிப்பட்டவர்களுக்காக எஸ்பிஐ ஒரு சிறப்பான வருடாந்திர வைப்புத் திட்டத்தை வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | அமேசானின் பம்பர் ஆஃபர்...! ரூ.7000க்கும் குறைவான விலையில் சாம்சங்க் மொபைல்

எஸ்பிஐயின் வழங்கும் இந்த வருடாந்திர வைப்பு திட்டத்தில் நீங்கள் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் டெபாசிட் செய்த பிறகு மாதந்தோறும் வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.  எஸ்பிஐயின் வருடாந்திர வைப்புத் திட்டத்தில், வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மாதமும் அசல் தொகையுடன் வட்டியும் வழங்கப்படுகிறது, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் மீது ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கணக்கீடு செய்யப்படுகிறது. எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, சேமிப்புக் கணக்கை விட வருடாந்திர வைப்புத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தில், வங்கியின் டெர்ம் டெபாசிட்டில் கிடைக்கும் அதே வட்டி டெபாசிட்டுக்கும் கிடைக்கும் மற்றும் இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வைப்புத்தொகைக்கு வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை மாதாந்திர வருடாந்திரத்தின்படி குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்த வேண்டும் மற்றும் வங்கி உங்களுக்கு யுனிவர்சல் பாஸ்புக்கை வழங்குகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் 36, 60, 84 அல்லது 120 மாதங்களுக்கு முதலீடு செய்து கொள்ளலாம்.  இந்தத் திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்த அடுத்த மாதத்தில், நிலுவைத் தேதியிலிருந்து வருடாந்திரம் செலுத்தப்படும்.  அந்த தேதி அந்த மாதத்தில் இல்லை என்றால், அடுத்த மாத தேதியில் இருந்து வருடாந்திரம் பெறப்படும்.  டிடிஎஸ் கழித்து, இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு வருடாந்திர தொகை செலுத்தப்படும்.  வேண்டுமானால் ஆண்டுத்தொகையின் இருப்புத் தொகையில் 75% வரை ஓவர் டிராஃப்ட் செய்யலாம்.  அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளுக்கு சென்று எஸ்பிஐயின் வருடாந்திர டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.   இந்த கணக்கை வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளும் விருப்பமும் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தில் டெபாசிட் செய்த முதலீட்டாளர் இறந்துவிட்டால் அவரது கணக்கு முன்கூட்டியே மூடப்படும்.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News