SBI வங்கிக்கு 1 கோடி அபராதம்; வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 10:38 AM IST
SBI வங்கிக்கு 1 கோடி அபராதம்; வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு title=

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐக்கு ரிசர்வ் வங்கி (RBI) அபராதம் விதித்துள்ளது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) ஒழுங்குமுறை வழிமுறைகளை (Regulatory Directions) பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கை) வழிகாட்டுதல்கள் 2016 இன் விதிமுறைகளுக்கு இணங்காததால் எஸ்பிஐக்கு இந்த அபராதம் வித்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மீதான தாக்கம் என்ன?
வணிக வங்கிகள் (Commercial Banks) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் (Financial Institutions) சார்பாக வாடிக்கையாளர்களுடன் மோசடிகளை வகைப்படுத்துதல் மற்றும் புகாரளிப்பதற்கான விதிகளை (frauds classification) SBI மீறியதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank) தெரிவித்துள்ளது.

ALSO READ: Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது? 

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு -47 ஏ (1) (சி) விதிகளின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இந்த அபராதத்தை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களுடன் வங்கி செய்த எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மை பாதிக்கப்படாது என்று ஆர்பிஐ கூரியுள்ளது.

இதற்கிடையில், எஸ்பிஐ -யால் பராமரிக்கப்படும் வாடிக்கையாளரின் கணக்கை ரிசர்வ் வங்கி ஆராய்ந்தது. இந்த விசாரணையில், எஸ்பிஐ ஆர்பிஐ அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர் கணக்கின் அனைத்து விசாரணைகளையும், கடிதப் பரிமாற்றம் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்களையும் ஆர்பிஐ கண்காணித்தது.

கண்காணிப்பின் முடிவில், எஸ்பிஐ -யில் இருந்து கணக்கில் மோசடி குறித்த தகவல் ஆர்பிஐக்கு தாமதமாக வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த தொடர்பாக வங்கிக்கு ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததால் அதற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? இது குறித்து எஸ்பிஐ அளித்த பதிலை பரிசீலித்த பிறகு, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் எஸ்பிஐக்கு ரூ .1 கோடி அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

ALSO READ: SBI Cards சூப்பர் செய்தி: பண்டிகை கால cashback offer!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News