காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Last Updated : Mar 26, 2018, 08:15 AM IST
காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!  title=

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது. 

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம். தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இதையடுத்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. 

இதையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் கடந்த 24ஆம் தேதி டெல்லி சென்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News