அரசு தடுமாறும் நேரத்தில் RSS வழிநடத்தும்; மோகன் பகவத் உறுதி!

கான்பூரில் நடைப்பெற்ற சங் பரிவார் அமைப்பின் பொதுகூட்டத்தில் பேசிய மோகன் பகவத், அரசு தடுமாறும் நேரத்தில் RSS தக்க அறிவுரை வழங்கி வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 3, 2019, 07:42 AM IST
அரசு தடுமாறும் நேரத்தில் RSS வழிநடத்தும்; மோகன் பகவத் உறுதி! title=

கான்பூரில் நடைப்பெற்ற சங் பரிவார் அமைப்பின் பொதுகூட்டத்தில் பேசிய மோகன் பகவத், அரசு தடுமாறும் நேரத்தில் RSS தக்க அறிவுரை வழங்கி வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைப்பெற்ற சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் RSS தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். பொதுகூட்டத்தில் பேசிய அவர் ‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மகத்தான அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. அதற்காக அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது RSS அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும்’ என்று தெரிவித்தார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் RSS தலைவர் இவ்வாறு கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்குப்பின் RSS அமைப்பின் மற்றொரு கூட்டத்தில் மோகன் பகவத் பங்கேற்று பேசினார், அதில் அவர் உரையாற்றும்போது, சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருமாறும், கல்வியறிவின்மை, போதைப்பொருள், குடிப்பழக்கம் போன்ற சமூக தீமைகளை அகற்றுமாறும் RSS தொண்டர்களை கேட்டுக்கொண்டார். மேலும் RSS தொண்டர்கள் ஆணவத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Trending News