எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான மவுத் வாஷ் புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும்!

மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க இதை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2022, 04:55 PM IST
  • மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது.
  • மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான மவுத் வாஷ் புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும்! title=

மவுத்வாஷின் பக்க விளைவுகள்:  தற்போது பெரும்பாலானோர் தங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும்,  பிரெஷ் உடன் மவுத்வாஷையும் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் மவுத்வாஷ் உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கிறது என இதை உபயோகித்து வருகின்றனர். ஆனால் நீங்கள் தினமும் மவுத்வாஷ் பயன்படுத்தினால் அதுவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆம்,  அதிகப்படியான மவுத்வாஷ் பயன்பாடு பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் அதனை மிக அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மவுத்வாஷைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இங்கே கூறுவோம்?

அதிக மவுத்வாஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

வறட்சி பிரச்சனை

நீங்கள் தொடர்ந்து உங்கள் வாயில் வறட்சியை உணர்ந்தால், உங்கள் மவுத்வாஷும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் மவுத்வாஷில் ஆல்கஹால் உள்ளது. அதனால் இதை அதிகமாக பயன்படுத்தினால் வாயில் வறட்சி ஏற்படும்.

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு மெல்லக் கொல்லும் விஷம்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

சர்க்கரை நோய்

மவுத் வாஷ் செய்வதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு இரு முறை மவுத் வாஷ் செய்பவர்களுக்கு 55% சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மவுத் வாஷ் உபயோகிப்பதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது தொடரும்போது சர்க்கரை நோய் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது

எரிச்சல் அல்லது வலி

மவுத்வாஷைப் பயன்படுத்துவதால் பெரும்பாலானோர் எரிச்சல் உணர்வு மற்றும் வலி இருப்பதாக புகார் செய்கின்றனர். ஏனென்றால், சில மவுத்வாஷ்களில் அதிக அளவு ஆல்கஹால் உள்ளது.  இதன் காரணமாக நீங்கள் அதை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தினால், உங்களுக்கு எரிச்சல் உணர்வு மற்றும் வலி ஏற்படக் கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

புற்று நோய் ஆபத்து

இது மவுத்வாஷின் ஆபத்தான பக்க விளைவு ஆகும். மவுத்வாஷில்  உள்ள செயற்கை கூறுகள் புற்றுநோய் அபாயத்தை அதிரிக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தினமும் அல்லது அளவிற்கு அதிகமான மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு, புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஆபத்துக்கள் அதிகரிக்கலாம். அதனால்  மவுத்வாஷை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பற்கள் கறை

அளவிற்கு  அதிகமாக மவுத்வாஷ் பயன்படுத்தினால், அது பற்களில் கறை படிதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மேலும் படிக்க | கருவளையங்கள் அழகை கெடுக்கிறதா... மாயமாய் நீக்க ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News