நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை: அத்திப்பழத்தின் அட்டகாசமான நன்மைகளின் லிஸ்ட் இதோ

Benefits of Fig: அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2024, 09:57 AM IST
  • நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்.
  • உலர்ந்த அத்திப்பழங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை: அத்திப்பழத்தின் அட்டகாசமான நன்மைகளின் லிஸ்ட் இதோ

Benefits of Fig: நாம் உட்கொள்ளும் பல வித உணவுகள், காய்கள், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றின் மூலம் நமக்கு பல வகையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இவை நமது உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கின்றன. அப்படிப்பட்ட ஆரோக்க்கியமான உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழம் மிகவும் சுவையான ஒரு பழம்.  இதை பழுத்த பழமாகவும் உலர்ந்த வடிவிலும் உட்கொள்ளலாம். அத்திப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. 

Add Zee News as a Preferred Source

அத்திப்பழத்தை (Figs) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன. எனினும், இதை அதிகமாகவும் உட்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 அத்திப்பழம் சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வயிற்றுவலி, சிறுநீரகக் கற்கள், கல்லீரல் நோய் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நோயாளிகள் இந்தப் பழத்தைத் தவிர்க்க வேண்டும். 

உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் (Diabetes) 

2 அவுன்ஸ் உலர்ந்த அத்திப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 60 ஆக இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிதமான உணவாக கூறப்படுகின்றது. இந்த பழத்தில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் கலவையாகும். அத்துப்பழத்தை குறைந்த அளவில் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு (Blood Sugar Level) கட்டுக்குள் இருக்கும்.

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

2. எடை இழப்பு (Weight Loss)

உலர்ந்த அத்திப்பழங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் உடலுக்கு நிறைவான உணர்வு கிடைக்கின்றது. இதன் காரணமாக நாம் அவ்வப்போது தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது பசியைக் குறைத்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் (Immunity)

மாறிவரும் பருவ நிலை காரணமாக, நாம் அடிக்கடி பல நோய்களுக்கு பலியாகிறோம். பல வகையான வைரஸ் தொற்றுகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. இவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமாகும். அப்போதுதான் பருவகால காய்ச்சல், சளி, இருமல், சளி, சரும பிரச்சனைகள் ஆகியவற்றைத் தவிர்க்க முடியும். அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவற்றை சாப்பிட பல உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் பானம்: குடிச்சே குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News