சுகர் பேஷண்ட்ஸ் கவனிங்க, சர்க்கரை அளவை குறைக்கும் 5 எளிய வீட்டு குறிப்புகள்

ப்ரீ நீரிழிவு நோய் மிக விரைவாக நீரிழிவு நோயாக மாறும், எனவே அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவது மிகவும் முக்கியம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 12, 2022, 01:52 PM IST
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துங்கள்.
  • நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.
  • உயர் இரத்த சர்க்கரை.
சுகர் பேஷண்ட்ஸ் கவனிங்க, சர்க்கரை அளவை குறைக்கும் 5 எளிய வீட்டு குறிப்புகள் title=

உயர் இரத்த சர்க்கரை அளவு ஒருவரின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அதிக சர்க்கரை அளவு நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது ஒரு நாள்பட்ட நோயாகும். நீரிழிவு இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் போன்ற ஒரு நோய் திடீரென வராது, அன்றாடம் தவறான உணவுப்பழக்கத்தால், அதன் அபாயம் அதிகரித்து, இதனால் இதை ப்ரீ டயாபெட்டிஸ் என்பார்கள். இந்த கட்டத்தில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது மிக விரைவாக டைப் 2 நீரிழிவு நோயாக மாறும். அதை சரிசெய்ய சில எளிய குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

ப்ரீ டயாபெட்ஸ் அறிகுறிகள்

- அடிக்கடி தாகம் எடுப்பது
- சோர்வு
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- திடீர் எடை குறைதல் மற்றும் காரணம் தெரியாமல் இருப்பது
- அதிகப்படியான பசி
- உணர்வின்மை
- கை கால்களில் உணர்வின்மை

மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை! 

இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

1. சர்க்கரை உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்
சர்க்கரையில் நிறைய கலோரிகள் உள்ளன மற்றும் ஊட்டச்சத்தும் இதில் இல்லை. சர்க்கரையை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்பினால், தேன், வெல்லம் போன்ற இயற்கை விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

2. உடற்பயிற்சி செய்யுங்கள்
ஆரோக்கியமாக இருக்க, உடல் சுறுசுறுப்பாக இருப்பதும் மிகவும் அவசியம். உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்யுங்கள். தினமும் சிறிது நேரம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். அரை மணி நேரம் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். 

3. கசப்பான காய்கறிகள் மற்றும் மூலிகைகளை உட்கொள்ளுங்கள் 
பாகற்காய், வெந்தயம், புதினா, பிரிஞ்சி, கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றை சாப்பிடுவதால் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இந்த காய்கறிகள் தவிர, சில ஆயுர்வேத மூலிகைகளான திரிபலா, கொட்டை புல், ஹிமாலயன் கேதுரு போன்றவற்றையும் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 

4. மது மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்
மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் இன்சுலின் செயல்பாட்டின் தோல்வி அபாயத்தை அதிகரிக்கிறது. இன்சுலின் கார்போஹைட்ரேட்டுகளை உடைத்து அவற்றை குளுக்கோஸாக மாற்றுகிறது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. ஒருவருக்கு அதிக சர்க்கரை அளவு இருந்தால், அவர்கள் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வீட்டில் உள்ள 4 பொருட்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News