Corona Vaccine: முதல் கட்டத்தில் 2வது டோஸ் போடும் பணி இன்று தொடங்கியது

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காலை 10.30 மணிக்கு துவக்கி வைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2021, 12:21 PM IST
  • நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
  • கடந்த 28 நாட்களில் சுமார் 77.66 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 தடுப்பூசி காரணமாக எவரும் இறக்கவில்லை
Corona Vaccine: முதல் கட்டத்தில் 2வது டோஸ் போடும் பணி இன்று தொடங்கியது title=

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் (Corona Virus), கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,  தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’(Covishield), பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்ஸின்’(Covaxin) ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காலை 10.30 மணிக்கு துவக்கி வைத்தார். 

இந்தியாவில் (India) கடந்த 28 நாட்களில் சுமார் 77.66 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மிக அதிக அளவாக உத்திரப்பிரதேசத்திலும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் போடப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு மொத்தம் 23 பேர் உயிர் இழந்தனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசி காரணமாக இல்லை என்பதோடு, மொத்த தடுப்பூசிகளில் இவை 0.0003 சதவீதம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் உயிரிழந்ததில், ஒன்பது இறப்புகள் மருத்துவமனையில் பதிவாகியுள்ளன, 14 பேர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்ற பின் இறந்தனர்.

இந்த இறப்புக்கள் எதுவும் கோவிட் -19 தடுப்பூசியுடன்  தொடர்புடைய இறப்புகள் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ‘மிகவும் பாதுகாப்பானவை’ என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிலையில், முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருத்து செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் படி, ஜனவரி 16ம் தேதி 

முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், பிற நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. 

ALSO READ | உலகளவில் தடுப்பூசி பணியில் முதலிடத்தில் இந்தியா; 19 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசி ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News