மூளை புற்றுநோயின் 7 சைலண்ட் அறிகுறிகள்: தொடர்ந்து தலைவலிக்கிறதா? கவனம்

தொடர்ந்து தலைவலி இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மூளை புற்றுநோயின அறிகுறியாகவும் இருக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 4, 2022, 02:58 PM IST
  • தொடர் தலைவலியா? எச்சரிக்கை
  • மூளை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்
  • மூளை புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகள்
மூளை புற்றுநோயின் 7 சைலண்ட் அறிகுறிகள்: தொடர்ந்து தலைவலிக்கிறதா? கவனம் title=

புதுடெல்லி: இரவில் தொடர்ந்து தலைவலி உள்ளதா? மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்யவும். ஏனெனில் தொடர் தலைவலியும் மூளை புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மூளை புற்றுநோய் ஒரு வீரியம் மிக்க மூளைக் கட்டியுடன் தொடங்குகிறது, இது மூளையில் உள்ள செல்கள் அதிகமாக வளர்வதால் ஏற்படுகிறது.

உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக புற்றுநோய் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பிற வகை புற்றுநோய்களைவிட மூளை புற்றுநோய் என்பது பல எச்சரிக்கை அறிகுறிகளை காட்டுவதாக கூறப்படுகிறது.

பொதுவாக புற்றுநோயை சரியான சமயத்தில், அதாவது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்துவது சுலபமானது. சில நேரங்களில் மக்கள் புற்றுநோயை சரியான நேரத்தில் அடையாளம் காணத் தவறிவிடுவார்கள்.

மேலும் படிக்க | உணவுகளில் உள்ள 5 இரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

அதுவே, நோய் குணமாக்குவதில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த கட்டுரையில், மூளை புற்றுநோயின் சைலண்டான அறிகுறிகளைப் தெரிந்துக் கொள்வோம். மூளையில் பிரச்சினைகள் இருக்கும்போது உடல் நமக்கு எவ்வாறு செய்திகளை அனுப்புகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

மூளை புற்றுநோய்

புற்றுநோய் என்றால் என்ன? இந்த நிலை பொதுவாக உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் குறிக்கப்படுகிறது. மருத்துவ மொழியில், புற்றுநோய் என்பது ஒரு கடுமையான நோயாகும்,

இதில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து உடல் திசுக்களை அழிக்கின்றன. மூளை பகுதியில் உருவாகும் புற்றுநோய், மூளையில் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது. 

மூளை புற்றுநோய் ஒரு வீரியம் மிக்க மூளைக் கட்டியுடன் தொடங்குகிறது, சில நேரங்களில், இந்த புற்றுநோய் மூளைக் கட்டிகள் மிக விரைவாக வளர்ந்து, உடலின் வேலை செய்யும் பொறிமுறையை சீர்குலைக்கும். எனவே, சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளைக் கட்டிகள், அதைத் தொடர்ந்து மூளை புற்றுநோய் ஆகியவை உயிருக்கு உலை வைப்பவை.

மேலும் படிக்க | அதிகளவு சர்க்கரை உண்பதால் புற்றுநோய் ஏற்படுமா? 

மூளை புற்றுநோயின் அமைதியான அறிகுறிகள்

சரியான நேரத்தில் சரியான சிகிச்சை என்று நாம் கூறும்போது, ​​​​அறிகுறிகள் தோன்றியவுடன் அவற்றைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கிறது. இதை எப்படி செய்ய முடியும்? மூளை புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், அடிக்கடி கண்டறியப்படாதவை கூட.

நீங்கள் அடிக்கடி நாள்பட்ட தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இது மூளை புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம், மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள் மூளைக் கட்டியின் அளவைப் பொறுத்தது என்றாலும், சில சமயங்களில் அந்த அறிகுறிகள் வேறு சில பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

இருந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். மூளை புற்றுநோயின் இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது:

மேலும் படிக்க | மார்பக புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இரவில் மட்டுமே தோன்றும் நிலையான தலைவலி
குமட்டல் அல்லது வாந்தி
கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
சிந்தனையில் சிரமம் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை
நடப்பது அல்லது உடலின் இயக்கத்தை சமன் செய்வது கடினம்
பேச்சு பிரச்சனை அல்லது பேசுவதில் சிரமம்
பார்வை பிரச்சினைகள் அல்லது அசாதாரண கண் அசைவுகள்

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News