அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுதலை பெற இதோ டிப்ஸ்

அன்றாட வாழ்க்கையில் அசிடிட்டி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2022, 06:56 AM IST
  • ஆரோக்கிய சிக்கலை ஏற்படுத்தும் அசிடிட்டி
  • அசிடிட்டியில் இருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டுமா?
  • நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது இந்த விஷயங்களில் தான்
அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுதலை பெற இதோ டிப்ஸ்  title=

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக, வயிற்றில் வாயுக்கள் அதாவது அமிலத்தன்மை அதிகரிக்கும். இப்போதைய சூழலில் பலரும் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சமாளிக்க, மக்கள் பல வகையான மருந்துகளை சாப்பிடுகிறார்கள். ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இங்கே பிரச்சனைக்கான காரணம் மற்றும் தீர்வு என இரண்டையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Good Cholesterol அளவை எளிதாக அதிகரிக்க சூப்பர் வழிகள் இதோ

வயிற்றில் வாயு உருவாவதற்கான காரணம்

நீங்கள் உணவையோ அல்லது தண்ணீரையோ உட்கொள்ளும் போதெல்லாம், சிறிது காற்று உங்கள் உடலுக்குள் செல்லும். நீங்கள் உண்ணும் உணவை செரிமான அமைப்பு ஜீரணிக்கும்போது, ​​வாயு உருவாகிறது. இந்த காற்று உங்கள் வயிற்றைச் சுற்றி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக உங்களுக்கு வாயு (அமிலத்தன்மை) மற்றும் ஏப்பம் ஏற்படுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு தினமும் வயிற்றில் 2 கிளாஸ் வாயு இருப்பது இயல்பானது. இருப்பினும், உங்கள் வயிற்றில் அதிக வாயு உருவாகத் தொடங்கினால், அது கவலைக்குரிய விஷயம். இது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

வெதுவெதுப்பான நீர் 

உங்களுக்கு அதிக அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால், வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இஞ்சி மற்றும் புதினா தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெருஞ்சீரகம் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவை அமிலத்தன்மையைப் போக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.

அசிடிட்டியில் இருந்து நிவாரணம் 

வயிற்று வாயு அல்லது அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, குளிர் பானங்கள் அருந்துவதையும், தேநீர் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதையும் தவிர்க்கவும். மேலும் வெங்காயம், உருளைக்கிழங்கு, கீரை போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இதனால் வயிற்றில் அதிக வாயு உருவாகிறது. உணவு உண்ணும் போது பேசுவதை தவிர்க்கவும், அதனால் காற்று உடலுக்குள் செல்வதை தடுக்கலாம். மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்கள் அமிலத்தன்மைக்கு முக்கிய காரணமாகின்றன. எனவே, அவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள்: கோடையை கூலா கழிக்கலாம்

என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள்

வயிற்றில் வாயு (அமிலத்தன்மை) உருவாகி, அது வெளியேற முடியாமல் போனால், வயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் தொடங்கும். இதன் காரணமாக, அந்த நபர் மந்தமாகி, சாதாரணமாக இருக்க முடியாது. அவர் வயிறு வீங்கியிருப்பதைபோல் உணர்வார். இதனால் நிம்மதியாக இருக்க முடியாது. மன உளைச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இப்படியான சூழல் இருந்தால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News