10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை..!

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து மும்பையின் வித்யாவிஹார் ரயில் நிலைய தடங்களில் சடலமாக வீசிய கொலையாளி..! 

Last Updated : Nov 11, 2019, 10:57 AM IST
10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை..! title=

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து மும்பையின் வித்யாவிஹார் ரயில் நிலைய தடங்களில் சடலமாக வீசிய கொலையாளி..! 

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி காணாமல் போன 10 வயது சிறுமியின் சடலம் மும்பையில் உள்ள வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை அவரின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முன் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. இது குறித்து காவல்துறையினர் ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நாளில் சிறுமியுடன் வெளியேறுவதை அப்பகுதியைச் சேர்ந்த CCTV காட்சிகள் காட்டியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் பெற்றோர் காணாமல் போன புகாரை பதிவு செய்திருந்தனர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

Trending News