திகில் தொடர் பார்த்த பயத்தில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

தொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jun 25, 2019, 02:45 PM IST
திகில் தொடர் பார்த்த பயத்தில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை! title=

தொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

மத்திய பிரதேச மாநிலம் சட்டார்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, தனது சகோதரியுடன் இணைந்து தொலைகாட்சியில் திகில் தொடர் பார்த்துள்ளார். குழந்தைகளில் பெற்றோர் சந்தைக்கு சென்ற நேரத்தில் குழந்தைகள் திகில் தொடர் பார்த்திருந்த நிலையில் அதிர்ச்சில் ஆழ்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

அதன் படி மூத்த பெண் வீட்டில் இருந்து காலி பக்கெட் மற்றும் துண்டு உதவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த காட்சிகளை அருகில் இருந்து பார்த்த இளைய மகள், தனது சகோதரி துடிப்பதை கண்டு அருகில் இருக்கும் வீட்டாரை உதவிக்கு அழைத்துள்ளார். எனினும் உயிருக்கு போராடிய சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியின் நிலைமையை குறித்து அவரது பெற்றோருக்கு அருகாமை வீட்டார் தகவல் அளித்த நிலையிலும், பெற்றோர் வீடு வந்து சேருவதற்கு முன்னதாக சிறுமி பலியானது சிறுமியின் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பின்னர் உடலை பெற்றோர்களிடன் ஒப்படைத்துள்ளனர்.

Trending News