ஓடும் ரயில் முன் TikToK வீடியோ; 2 இளைங்கர்கள் பரிதாபமாக பலி...

டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Sep 28, 2019, 01:45 PM IST
ஓடும் ரயில் முன் TikToK வீடியோ; 2 இளைங்கர்கள் பரிதாபமாக பலி... title=

டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்த 19 வயது அப்தாப்ஷெரீப் மற்றும் 23 வயது முகமது மாடின். இவர்களுக்கு TikToK வீடியோ மீது அளவுகடந்த மோகம். இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஜபியுல்லாகான் என்ற மற்றொரு நம்பரை சந்தித்து பேசினர். பின்னர், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா இடையேயான ரெயில்வே தண்டவாள பகுதியில் நின்று 'TikToK' வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

ஜபியுல்லா கான் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்ற இருவரும ‘TikToK‘ வீடியோவுக்காக நடித்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த பயணிகள் ரெயில் இவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜபியுல்லா கான் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன்னர்தான் அவ்வழியாக ஒரு சரக்கு ரெயில் சென்றுள்ளது. அதன் பிறகு பயணிகள் ரெயில் வந்துள்ளது. அப்போது லோகோ பைலட் விசில் ஊதி உள்ளார். அதை வாலிபர்கள் கவனிக்காமல் TikToK-ல் மூழ்கி இருந்ததால் ரெயில் மோதி இறந்துள்ளனர் என்றனர். 

 

Trending News