காற்றாடி நூல் அறுத்து 3 பேர் உயிரிழப்பு!

Last Updated : Aug 17, 2016, 09:20 PM IST
காற்றாடி நூல் அறுத்து 3 பேர் உயிரிழப்பு! title=

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தடையை மீறி டெல்லியில் காற்றாடிகள் விடப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி விடப்பட்ட காற்றாடிகளில் நூல் அறுத்து 

சாலையில் பெற்றோருடன் வாகனத்தில் சென்ற குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்தை அடுத்து, காற்றாடிகள் செய்வதற்கும், விற்பதற்கும் உடனடியாக டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

Trending News