தூங்கிக்கொண்டிருந்த யாத்ரீகர்கள் மீது பஸ் ஏறியதில் 7 பேர் பரிதாப பலி...

உ.பி. புலந்த்ஷாரில் தூங்கும் யாத்ரீகர்கள் மீது பஸ் ஏறியதால் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

Last Updated : Oct 11, 2019, 10:36 AM IST
தூங்கிக்கொண்டிருந்த யாத்ரீகர்கள் மீது பஸ் ஏறியதில் 7 பேர் பரிதாப பலி... title=

உ.பி. புலந்த்ஷாரில் தூங்கும் யாத்ரீகர்கள் மீது பஸ் ஏறியதால் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நான்கு பெண்கள் மற்றும் ஒரே குடும்பத்தின் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புனித யாத்திரை சென்ற பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவர்களை நசுக்கியது. அவர்கள் ஹத்ராஸைச் சேர்ந்தவர்கள், கங்கையில் நீராடி நராரா காட்டிலிருந்து திரும்பி வந்தனர். 
தகவல்களின் படி, வைஷ்ணோ தேவியிலிருந்து யாத்ரீகர்களுடன் பஸ் திரும்பி வந்தது. விபத்துக்குப் பிறகு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

Trending News