7th Pay Commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது

7 வது ஊதியக்குழு: 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 09:44 PM IST
  • 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்.
  • 18 மாத நிலுவைத் தொகை மத்திய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாது.
  • ஜனவரி 1, 2020 மற்றும் ஜூன் 30, 2021 க்கு இடைப்பட்ட காலம் வரை அகவிலைப்படி விகிதம் 17%.
7th Pay Commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது title=

7th Pay Commission Latest News: மத்திய அரசின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்பான அகவிலைப்படி உயர்த்தி தரப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த கொரோனா காலத்தில் மிகப்பெரிய செய்தியாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நிலுவைத் தொகை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு பெரிய சிக்கலை தந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 18 மாத நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான  டிஏ (Dearness Allowance) மற்றும் டிஆர்ஐ நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

நிதி அமைச்சின் கீழ் வரும் செலவினங்கள் துறை சார்பில், அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி அமல்படுத்துவது குறித்து மெமோராண்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி,  ஜனவரி 1, 2020 மற்றும் ஜூன் 30, 2021 க்கு இடைப்பட்ட காலம் வரை அகவிலைப்படி விகிதம் 17% என்றே கருதப்படும் என்று தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த காலகட்டத்தில் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு படி நிலுவைத் தொகை கிடைக்காது எனக் கூறியுள்ளது.

ALSO READ | 7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா!!

ஆகஸ்ட் முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்:
செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில், 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜூன் 1 வரையிலான காலக்கட்டத்திற்கு, உயரத்தப்பட்ட 28 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் தவணைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 17 சதவீத அகவிலைப்படியை, 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த  அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை 1 முதல் பொருந்தும். அதாவது, ஆகஸ்ட் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் உயர்த்தப்பட்ட சதவீதத்தின் அடிப்படையில் பணத்தை மத்திய ஊழியர்கள் பெறுவார்கள்.

ரயில்வே-பாதுகாப்பு தனி உத்தரவுகளை பிறப்பிக்கும்:
இந்த உத்தரவு சிவில் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று செலவினங்கள் துறை அலுவலக சுற்றறிக்கை கூறுகிறது. இந்த உத்தரவு ஆயுதப்படைகள், ரயில்வேயுடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு பொருந்தாது. இவர்களுக்காக, பாதுகாப்பு அமைச்சும், ரயில்வே அமைச்சும் தனித்தனி உத்தரவுகளை பிறப்பிக்கும்.

வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரித்துள்ளது:
அகவிலைப்படி அதிகரித்ததன் மூலம், வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரித்துள்ளது.  எச்.ஆர்.ஏ 1 முதல் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 7, 2017 தேதியிட்ட செலவினங்கள் துறை உத்தரவில், அகவிலைப்படி உயர்வு 25 சதவீதத்தை தாண்டினால் எச்.ஆர்.ஏவில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியிருந்தது. இந்த விதியின்காரணமாக, எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் திருத்தப்பட்ட விகிதங்களின்படி, அடுத்த மாதத்திலிருந்து, அதாவது ஆகஸ்ட் 2021 முதல் அதிகரித்த HRA-ஐப் பெறுவார்கள்.

ALSO READ | 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 28% DA உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News