தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா...

மார்ச் மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது 400 பேர் நாவல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 2, 2020, 06:42 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சுமார் 9,000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • டெல்லியில் இதுபோன்ற சுமார் 2,000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களில் 1,804 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், 334 அறிகுறி நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா... title=

மார்ச் மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது 400 பேர் நாவல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"தெலங்கானாவில் கண்டறியப்பட்ட கொரோனா வழக்குகளுடன் தப்லிகி ஜமாஅத் சபையின் இணைப்பு குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயணம் செய்த மாநிலங்களில் தீவிர தொடர்பு தடமறிதல் மற்றும் மாதிரி செயல்முறைகளை நாங்கள் மேற்கொண்டோம். இதுவரை குறைந்தது 400 நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. நிஜாமுதின் மார்கஸ் கிளஸ்டருடன் தொடர்புடைய இந்த மாநிலங்களில் இருந்து வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன," என்று மத்திய சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

கூடுதல் சோதனைகள் நடைபெற்று வருவதால், இந்த இணைப்புகளுடன் தொடர்புடைய வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அமைச்சக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

"இதுவரை கிடைத்த தகவல்களின்படி, டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தில் 173 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன, ராஜஸ்தான் 11, ஆண்ட்மன் நிக்கோபார் ஒன்பது, டெல்லி 47, புதுச்சேரி 2, ஜம்மு-காஷ்மீர் 22, தெலுங்கானா 33, ஆந்திரா 67 மற்றும் அஸ்ஸாம் 16 நாவல் கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளன” என்று சுகாதார அமைச்சக அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சுமார் 9,000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தினசரி செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் இதுபோன்ற சுமார் 2,000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களில் 1,804 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், 334 அறிகுறி நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை அடையாளம் காண மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து உள்துறை அமைச்சகம் (MHA) மேற்கொண்ட "பாரிய முயற்சியின்" விளைவாக இந்த கிடைத்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News