தாய் வீட்டுக்கு சென்ற மனைவி... கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர்

Man Cuts Private Part: மனைவி தாய் வீட்டுக்குச் சென்று, நீண்ட நாளாக, தன் வீட்டுக்கு வராததால் கோபத்தில் தனது பிறப்புறுப்பை 25 வயதான இளைஞர் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2023, 07:09 AM IST
  • இச்சம்பவம் பிகாரில் நடந்தது.
  • அந்த இளைஞர் பஞ்சாப்பில் பணியாற்றி வந்தார்
  • 2 மாதத்திற்கு பின் தற்போது தனது குடும்பத்தை பார்க்க வந்தார்.
தாய் வீட்டுக்கு சென்ற மனைவி... கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர் title=

Man Cuts Private Part: பிகாரின் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ரஜினி நயநகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 20) இரவு ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்ததுள்ளது. ரஜினி நயநகர் பகுதியில் 25 வயதான கிருஷ்ணா பாசுகி என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பிகாரின் கோல்போரா பகுதியில் வசித்து வரும் சோத் லால் பாசுகி என்பவரின் மகளான அனிதாவை திருமணம் செய்துள்ளனர். 

கிருஷ்ணா பாசுகி - அனிதா தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது, கிருஷ்ணா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மண்டி பகுதியில் வசித்து அங்கேயே பணியாற்றி வந்துள்ளார். இவர், பிகார் ரஜினி நயநகர் பகுதியில் வசித்து வரும் தனது குடும்பத்தினரை பார்க்க இரண்டு மாதங்களுக்கு பின் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 2 மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள்! 7வது நாளில் யாருடன்? - புது ஒப்பந்தம்

அப்போது, மனைவி அனிதா அங்கு இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. அனிதா அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும், நீண்டநாள் ஆகியும் ரஜினி நயநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவில்லை எனவும் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

இதையடுத்து, கிருஷ்ணாவுக்கும், அனிதாவுக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தனது பெற்றோரை தனியாக தவிக்கவிட்டு, அனிதா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்று நீண்டநாளாக வரமால் இருந்ததால், கோபமடைந்த கிருஷ்ணா கூர்மையான பொருளைக் கொண்டு, தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணாவை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணாவுக்கு நீண்ட நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

மேலும் படிக்க | கேரளாவில் பரவும் கொடூர வைரஸ்: கொத்து கொத்தாக உயிரிழக்கும் நாய்கள் - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News