CBSE: குழந்தைகளை சீரழிக்க பா.ஜ.க - RSS சூழ்ச்சி! ராகுல்காந்தி கண்டனம்

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்க ஆர்எஸ்எஸ் - பா.ஜ.க செய்யும் சூழ்ச்சி என விமர்சித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 14, 2021, 07:37 PM IST
  • சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து
  • பெண்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்து அருவருப்பானது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்
  • குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்க பா.ஜ. - ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி என விமர்சனம்
CBSE: குழந்தைகளை சீரழிக்க பா.ஜ.க - RSS சூழ்ச்சி! ராகுல்காந்தி கண்டனம் title=

சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத்தாளில் பெண்களுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் படித்து விடையளிக்கும் பகுதியில், "இல்வாழ்க்கையில் மனைவிகள் வலுப்பெறுவது, பெற்றோர் என்ற கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது. பெண்கள் கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். முன்பு அப்படியான சூழல் இருந்த நிலையில், இப்போது இல்லை. இதனால் இளம் தலைமுறையினர் தந்தையின் பேச்சை மதிப்பதில்லை. குழந்தைகளையும், வேலையாட்களையும் அவர்களுக்கான இடத்தில் வைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

ALSO READ |  இந்துத்துவவாதிகளை தூக்கி எறியுங்கள் - ராகுல்காந்தி ஆவேசம்

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மக்களவையில் இது குறித்து பேசிய சோனியா காந்தி, பெண்களின் சுதந்திரம் குறித்து சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வினாத்தாள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற அவர், இதற்காக சிபிஎஸ்இ மன்னிப்புகோர வேண்டும் என வலியுறுத்தினார். 

 

இதேபோல், சிபிஎஸ்சி சர்ச்சைக்குரிய வினாவுக்கு டிவிட்டரில் கண்டம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருக்கும் படித்து விடையளிக்கும் பகுதியில் உள்ள கருத்துகள் அருவருப்பானது என கூறியுள்ளார். இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க பாஜக - ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி செய்வதாக சாடியுள்ள அவர், கடின உழைப்பு மட்டுமே வெற்றி தரும். மதவெறி தராது எனக் கூறியுள்ளார். இதுவரை நடைபெற்ற பெரும்பாலான சிபிஎஸ்சி தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ALSO READ | CBSE மாணவர்கள் கவனத்திற்கு, புதிய முறையில் போர்டு தேர்வுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News