போலி முகநூல் கணக்கு மூலம் பணம் திரட்ட முயற்சி; பள்ளி மாணவன் கைது

காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 7, 2022, 08:28 AM IST
போலி முகநூல் கணக்கு மூலம் பணம் திரட்ட முயற்சி; பள்ளி மாணவன் கைது title=

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ராகுல் நாத் பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் முகநூலில் போலி கணக்கு உருவாக்கி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை எடுத்து மாவட்ட ஆட்சியரின் நண்பர்களிடம் பணம் கேட்டது கேட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்களுடைய நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தன்னுடைய பெயரில் போலி கணக்கு ஒன்றை துவங்கி தன்னுடைய நண்பர்களிடம், பணம் கேட்கிறார்கள் என செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் சம்பந்தப்பட்ட போலி கணக்கில் லிங்க் மற்றும்  ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவற்றை பகிர்ந்தார்.

மேலும் படிக்க | சிறையில் சொகுசு வசதிக்கு உதவி - மருத்துவர் பணியிடமாற்றம்

இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட செங்கல்பட்டு சைபர்கிரைம் காவல்துறையினர் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவகுமார் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் தலைமையில், காவலர்கள்  சுதாகர், குருநாதர், சங்கர் ,சிவா, கலைவாணன், ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் போலி கணக்கை பயன்படுத்தி நபரின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததால் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநிலம் சென்று முகமத் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரை கைது செய்தனர். இச்செயலில் ஈடுபட்டவர் சிறுவர் என்பதும், பத்தாம் வகுப்பு படித்து வருவதும் காவல்துறை நடந்த விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பரத்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று செங்கல்பட்டு மாவட்ட குழுமத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். சைபர் குற்றவாளியை கைது செய்த காவல் இருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இதுபோல் எவரேனும் முகநூல் மெசஞ்சர் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கூகுளே, அல்லது வேறு . ஏதாவது இணையதளம் மூலம் மிகவும் அவசரம் என பணம் கேட்டால் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 3 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்: 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News