மராட்டில் சட்டவிரோத குடியிருப்புகளை இடிப்பதற்கு நேரம் குறிப்பு!

எர்ணாகுளம் மாவட்டத்தில் மராட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 24, 2019, 07:45 PM IST
மராட்டில் சட்டவிரோத குடியிருப்புகளை இடிப்பதற்கு நேரம் குறிப்பு! title=

எர்ணாகுளம் மாவட்டத்தில் மராட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்பீடு இறுதி செய்யப்பட்டு, ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் கருத்தில் கொள்ள வேண்டிய சந்தை மதிப்பை ஒப்பந்தத்தில் உள்ளடக்கத்தையும் மாவாட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட மராட் பகுதியில் இருந்து அனைத்து கட்டிடங்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், இடிப்பு தீர்ப்பின் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. 

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதை இடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், கட்டிடங்களில் உள்ள பிளாட் உரிமையாளர்களுக்கு தலா ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.  இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகையை பில்டர்களிடமிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும், பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டின் மீதமுள்ள தொகை ஒரு குழுவால் கணக்கிடப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் அடங்கிய குழு பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை மேலும் மதிப்பீடு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றம் ஒப்புக் கொண்ட முழு செயல்முறையையும் முடிக்க கேரளா 120 நாட்கள் கால அவகாசம் கோரியது. இந்த செயல்முறையை மேற்பார்வையிடுவதற்கான குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்மொழியப்பட்ட பெயர்களின் பட்டியலையும் மதிப்பீட்டு செயல்முறையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த கட்டிடங்களை இடிப்பதற்கான கால நேரம் மற்றும் காப்பீடு தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

காப்பீடு தொகை மொத்தம் 95 கோடி. அதன்படி 

- ஆல்பா டவர் 1- 25crores
- ஆல்பா டவர் 2- 25 crores
- H2O ஹோலி பெய்த் - 25 crores
- ஜெயின் கோரல் கோவ் -10crores
- கோல்டன் கயலோரம் - 10 crores 

என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டு உரிமை கோரல்களுக்கு ரேடியல் வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டிடங்களை குண்டுவைத்து அகற்றுவதற்கான நேர அட்டவணை:

11-1-2020 அன்று
11.00 மணி - H20 ஹோலி பெய்
11.30 மணி - ஆல்பா டவர் 1 & 2

12-1-2020
11.00 மணி - ஜெயின் கோரல் கோவ்
14.00 மணி- கோல்டன் கயலோரம்

Trending News