டாக்டர்கள் வாக்குவாதம்: சிசு பலி- அதிர்ச்சி வீடியோ

Last Updated : Aug 30, 2017, 11:27 AM IST
டாக்டர்கள் வாக்குவாதம்: சிசு பலி- அதிர்ச்சி வீடியோ title=

அறுவை சிகிச்சை தியேட்டருக்குள், சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது இரு டாக்டர்கள் இடையே வாக்குவாதம் செய்து, சண்டையிட்டு கொண்ட சம்பவம் ராஜஸ்தான் ஜோத்பூரில் அரங்கேறி உள்ளது.

ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில், பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அப்போது அறுவை சிகிச்சை தியேட்டருக்குள் டாக்டர்கள் இருவர் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அவர்களை அருகில் இருந்த சக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சமாதானம் செய்வதும் நடந்துள்ளது. 

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் டாக்டர்களின் சண்டை காரணமாக, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.

 

 

இதையடுத்து, அந்த இறந்து டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

மருத்துவ அலட்சியத்தால் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், கர்நாடக மாநிலம் கோலார் ஆகியவற்றில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சி படித்தி வரும் நிலையில் தற்போது ராஜஸ்தானில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியில் உள்ளக்கி உள்ளது.

Trending News