ஆபாச படத்தை காட்டி சிறுமியை கூட்டு பிலாத்காரம் செய்த ஆசிரியர்!!

ஆறாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் மீது பதிவு!!

Last Updated : Jan 21, 2020, 04:13 PM IST
ஆபாச படத்தை காட்டி சிறுமியை கூட்டு பிலாத்காரம் செய்த ஆசிரியர்!! title=

ஆறாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் மீது பதிவு!!

மகாராஷ்டிரா நந்தீத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, ஆசிரியர்கள் இருவர் ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த மாணவியை குறிவைத்த ஆசிரியர்கள் ஆபாச படம் பார்க்க வைத்து வாய்ப்பு கிடைக்கும் போது பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், ஒருநாள் அந்த மாணவியை பள்ளியில் தனி அறையில் அடைத்து வைத்து ஆசிரியர்கள் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் 7 மாதங்களுக்கு முன்பு நடந்தாலும் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மறுநாளே பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றார். ஆனால், அதனை போலீசார் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இதை தொடர்ந்து, இந்த விவகாரம் வெளியேதெரிய ஆரம்பித்து பெரிதாவதை உணர்ந்த போலீசார் கடந்த 18 ஆம் தேதி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில், 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனினும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 ஆசிரியர்கள் இன்னும்  தலைமறைவாக உள்ளதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.  

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்.... பள்ளியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் வீடியோவைக் காண்பிக்கும் போலிக்காரணத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர்கள் ஒரு அறைக்குள் கவர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் ஆபாச கிளிப்புகள் காட்டப்பட்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர், பின்னர் அவரது பெற்றோரால் பள்ளிக்கு அருகில் கைவிடப்பட்டார். அவர் தீவிரமான ஆனால் நிலையானவர் என்று போலீசார் தெரிவித்தனர். 

Trending News