முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 26 அன்று 89 வயதை எட்டினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2021, 07:25 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸில் அனுமதி  title=

புது டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 26 அன்று 89 வயதை எட்டினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் பலவீனம் காரணமாக இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான மன்மோகன் சிங், கொரோனா இரண்டாவது அலை தொற்றின் போது, அவருக்கு கோவிட் -19 பாசிட்டிவ் இருந்தது சோதனையில் தெரியவந்தது.  அதன் பிறகு அவர் அப்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News