ஹைதராபாத்தில் ரூ.7.51 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 4 பேர் கைது

ஹைதராபாத்தில் 7,51,10,300 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...! 

Last Updated : Nov 8, 2018, 02:47 PM IST
ஹைதராபாத்தில் ரூ.7.51 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 4 பேர் கைது title=

ஹைதராபாத்தில் 7,51,10,300 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...! 

ஹைதராபாத்தில் ஏழரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், 4 பேரை கைது செய்துள்ளனர். சைஃபாபாத்தில் ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் காவல்துறையின் சிறப்பு படை பிரிவினர் சோதனை நடத்தினர்.

அங்கு 7 கோடியே 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 4 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறையினர் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவத்துள்ளனர். 

 

Trending News