ரஷியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கும் இந்தியா

ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2018, 01:14 PM IST
ரஷியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கும் இந்தியா title=

இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19_வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லி விமான நிலையத்தில் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார். அதேபோல இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவுகளை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக, ரஷியாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்பு பல மடங்கு உயரும்.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

இந்நிலையில், ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே இதுக்குறித்து 2+2 சந்திப்பின் போது அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காபவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தியா. இதை அமெரிக்கா புரிந்துக்கொண்டு சரியான முடுவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News