மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன், கரிபியன் தீவுக்கு தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2021, 08:12 PM IST
  • மெகுல் சோக்ஸி (Mehul Choksi) இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.
  • கடந்த மே 23 மாலை ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார்.
  • பின்னர் மே 26 அன்று டொமினிகாவில் சிக்கினார்.
மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன title=

நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தப்பியோடிய வைர வர்த்தகர் மெகுல் சோக்ஸி (Mehul Choksi)  இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.  

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன், கரிபியன் தீவுக்கு தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார். 

இந்நிலையில், கடந்த மே 23 மாலை ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். பின்னர் மே 26 அன்று டொமினிகாவில் சிக்கினார். 

இந்நிலையில், மெகுல் சோக்ஸியை (Mehul Choksi) விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வருவதை உறுதி செய்ய இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

"தப்பியோடியவர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவதற்கான முயற்சிகளில் இந்தியா உறுதியுடன் உள்ளது. மெகுல் சோக்ஸி தற்போது டொமினிகாவின் காவலில் இருக்கிறார். சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இந்தியாவிற்கு நாடு திருப்பி அழைத்து வருவதை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி தெரிவித்தார். 

இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், மெகுல் சோக்ஸி,  ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டதால், டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக சோக்ஸி மீது, காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டது. டொமினிகன் நீதிமன்றம் வியாழக்கிழமை மெஹுல் சோக்ஸிக்கு ஜாமீன் தர மறுத்தது.

ALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன

2018 ஜனவரியில், மெகுல் சோக்ஸிக்கு  ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமை வழங்கப்பட்டது. அவர், தான் இந்தியாவிடம்  ஒப்படைக்கப்படுவதைத் தடுக்க சட்டப் போரில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக,  மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களுடன் டொமினிகாவிற்கு இந்தியா ஒரு தனியார் ஜெட் அனுப்பியுள்ளதாக ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதம மந்திரி காஸ்டன் பிரவுன் (Gaston Browne) வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News