இந்திய கடற்படை தினம்: கடற்படை வீரர்களின் சேவைக்கு மோடி வாழ்த்து..!

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 4, 2019, 10:10 AM IST
இந்திய கடற்படை தினம்: கடற்படை வீரர்களின் சேவைக்கு மோடி வாழ்த்து..!  title=

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

டெல்லி: இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், கடற்படை தினத்தில், நமது கடற்படை வீரர்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்துவோம். கடற்படை வீரர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கியுள்ளன, என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் மற்றும் அனைத்து கப்பற்படைத் தொகுதிகளும் கராச்சி நகரிலே அமைந்திருந்தது. கடல்சார்ந்த வணிகத்தின் முக்கிய மையமாகவும் கராச்சி விளங்கியதால், அதனை முற்றுகையிட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் நாசம் விளைவிக்கும்வழி அமையும். ஆகையால், பாகிஸ்தானின் மேலிடத்துக்கு கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பு முதன்மையாக இருந்தது மற்றும் ஏதேனும் வான்வழி அல்ல கடல்வழி தாக்குதலிளிருந்து பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

டிசம்பர் 4 ஆம் தேதி அன்று இந்திய கடற்படை கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது. இந்த படை நடவடிக்கைக்கான பணி குழுமத்தில் மூன்று வித்யுத் ரக ஏவுகணை படகுகள், ஐஎன்எஸ் நிபட் (K86), ஐஎன்எஸ் நிர்கட் (K89) மற்றும் ஐஎன்எஸ் வீர் (K82) உபயோகபடுத்தபட்டது. இதைத் தவிர, இரண்டு பெட்ய ரக கார்வேட்டுகள், ஐஎன்எஸ் திர் மற்றும் ஐஎன்எஸ் கில்டன் (P) போன்றவைகளும் அப்பணி குழுவில் இருந்தன. இந்த பணிக் குழுவை இரண்டு ஏவுகணை எதிர்ப்பு ரோந்து கலங்கள் வழிநடத்தின. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு, இந்த பணிக்குழு பாகிஸ்தானின் இருப்பிடத்தை அறிந்து கராச்சிக்கு தெற்கே எழுபது கடலோடிகளுக்குரிய மைல்களில் இருந்த PNS முஹபிஸ் மற்றும் பிஎன்எஸ் கைபர் கப்பல்களை ஏவுகணை தாக்கி மூழ்கடித்தது.

இன்னொரு பாகிஸ்தானிய கப்பலான பிஎன்எஸ் ஷாஜஹான் கூட சேதபடுத்தப்பட்டது. ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிப்பொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன. உஷார் நிலையில் இருந்த பாகிஸ்தானிய கடற்படை டிசம்பர் ஆறாம் தேதி இன்னொரு ஏவுகணை தாக்குதல் நடப்பதாக போலி எச்சரிக்கை எழுப்பியது.

PAF விமானங்கள் அந்த கருதப்பட்ட இந்திய கப்பலை சேதப்படுத்தியது. பின்பு, அது பாகிஸ்தானிய கப்பல் பிஎன்எஸ் சுல்பிகர் என்று அறிந்தனர். இந்த கப்பலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. படை நடவடிக்கை திரிசூலம் இந்திய கப்பற்படைக்கு ஓர் மாப்பெரும் வெற்றியாக அமைந்தது, ஏனெனில் இந்திய கப்பற்படை பணிக்குழுவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தெரிந்த பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு ஒருதிட்டமிட்ட மற்றும் முன்னதாகவே பயிற்சி எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிந்தனர்.

இந்த வெற்றியை இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் பதிவிடுத்துள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், "கடற்படை தினத்தில், நமது கடற்படை வீரர்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்துவோம். கடற்படை வீரர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கியுள்ளன", என குறிப்பிட்டுள்ளார்.  

 

Trending News