ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்

Last Updated : Aug 19, 2016, 07:03 PM IST
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்  title=

குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயம் அடைந்த வீரர்கள் ஸ்ரீநகருக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகளை அடக்கிப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நாச்சின் கிராமத்தில் உள்ள இந்த முகாம் ஆயுதக் கிடங்கு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு உள்ளனர். 

Trending News