ஜம்முவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வயது சிறுமி உட்பட 4 படுகாயம்!

ஜம்மு காஷ்மீரில்  சிறுமி உட்பட 4 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது 'இரக்கமற்ற செயல்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்!!

Last Updated : Sep 7, 2019, 07:56 PM IST
ஜம்முவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வயது சிறுமி உட்பட 4 படுகாயம்! title=

ஜம்மு காஷ்மீரில்  சிறுமி உட்பட 4 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது 'இரக்கமற்ற செயல்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போரில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நான்கு வயதுடைய மைனர் பெண் உட்பட நான்கு பேரை கோழைத்தனமாக சுட்டுக் கொன்றனர். 

ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அனுப்பவோ விற்கவோ கூடாது என்று பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்துள்ளனர். 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், J&K-வில் வணிகங்கள் சரிந்துவிட்டன என்று பயங்கரவாதிகள் பொய்யாக தகவலை சித்தரிக்க முயல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கான காரணம் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை புறக்கணிதத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக நம்பபடுகிறது. காயமடைந்தவர்களில் 60 வயதான முகமது அஷ்ரப் தார் வலது தொடையில் காயம் அடைந்துள்ளார், இடது தொடையில் துப்பாக்கியால் காயமடைந்த 45 வயதான முகமது ரம்ஜான் தார், 32 வயதான இர்ஷாத் உசேன் ராதர் இடது முழங்கால் மற்றும் காலில் துப்பாக்கியால் காயமடைந்தார். மைனர் சிறுமியின் வலது காலில் துப்பாக்கியால் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

Trending News