காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்த தாய்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்து காயப்படுத்திய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 28, 2022, 01:25 PM IST
  • குழந்தை காலை நெருப்பில் வைத்த தாய்.
  • தாயின் கொடூர செயல்.
  • போலீசார் கைது செய்து விசாரணை.
காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்த தாய்!  title=

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த நான்கு வயது சிறுவனின் காலை சொந்த தாய் அடுப்பில் வைத்து காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.  அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த சுப்ரமணியன் மற்றும் ரஞ்சிதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளனர். மூத்த மகனை சுப்பிரமணியனும், இளைய மகனை ரஞ்சிதாவும் கவனித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் ரஞ்சிதா தனது இளைய மகனுடன் உண்ணிகிருஷ்ணன் என்ற காதலன் வீட்டில் மூன்று மாதமாக தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் காலில் பலத்த சூடு போட்ட காயங்களுடன் கோட்டத்துறை மலை கிராம மருத்துவமனையில் நான்கு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பெற்று விருவதாக பாலக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  சம்பவ இடம் சென்று போலீசார் விசாரித்ததில் தாயும் தனது தற்போதைய காதலனும் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்து காயப்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சிதாவின் முதல் கணவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சிதாவையும் அவரது காதலன் உன்னிகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

kerala

மேலும் படிக்க | உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நேரலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை

இதில் ரஞ்சிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் மிகவும் சுட்டித்தனம் உடையவன் சொல் பேச்சை கேட்காததால் கேஸ் ஸ்டவ்வை சூடாக்கி அதல் சிறுவனின் காலை வைத்து காயப்படுத்தியதாக தெரிவித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் தினமும் மது அருந்தி வந்துவிட்டு வயர்களை வைத்து நான்கு வயது சிறுவனையும் தினசரி தாக்கி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து நான்கு வயது சிறுவனை தனது தந்தை சுப்ரமணியனுடன் அனுப்பி வைத்துள்ளனர். சொந்த தாயின் இந்த கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சவப்பெட்டியுடன் சிரித்தபடி போட்டோ எடுத்த குடும்பம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News