9-வயது சிறுவனை வன்கொடுமைக்கு ஆளாக்கிய 36-வயது பெண்...

9 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக கேரளாவை சேர்ந்த 36-வயது பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Feb 12, 2019, 02:09 PM IST
9-வயது சிறுவனை வன்கொடுமைக்கு ஆளாக்கிய 36-வயது பெண்... title=

9 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாக கேரளாவை சேர்ந்த 36-வயது பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்!

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 36-வயது பெண்மணி ஒருவர் கடந்த சில மாதங்களாக தனது தனது உறவினர் மகனை பாலியல் ரீதியாக சீண்டியதாகவும், அதன் காரணமாக அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தங்களது மகனை மருத்துவமனையில் கொண்டு சென்று பரிசோதித்த போது, சிறிவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவர் அறிக்கையுடன் காவல்துறையை பொற்றோர்கள் அனுகியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள அவரது அத்தை தான் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண்மணி மீது POCSO Act பிரிவு 5 மற்றும் 6-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Trending News