கனமழையால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28 ஆம் தேதி வரை விடுமுறை!

கனமழையால் கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!!

Last Updated : Aug 17, 2018, 10:26 AM IST
கனமழையால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28 ஆம் தேதி வரை விடுமுறை!  title=

கனமழையால் கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!!

கேரளாவில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வரலாறு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. 

கேரளாவில் உள்ள 27 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவை வெள்ளம் சூழ்ந்து இரண்டு வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

கனமழையின் காரணமாக இதுவரை 97-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 94 வடங்களில் இல்லாத பேரழிவைத் தற்போது கேரளா சந்தித்துவருகிறது. நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் மீட்புப்பணிகளும் நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கேரளாவின் பிரதான விளை பொருள்களான தென்னை, தேயிலை, ரப்பர் போன்ற அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில், கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

 

Trending News