மைனர்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்

Voter ID card: 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 28, 2022, 09:43 AM IST
  • மேஜர் ஆகாதவர்களும் வாக்காளர் அட்டை பெறலாம்
  • 18 வயதுக்கு முன் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
  • புதிய விதிமுறைகள் என்ன? எப்படி விண்ணப்பிக்கலாம்?
மைனர்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள் title=

புதுடெல்லி: 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்திலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, வசதிகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

18 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியமானது. ஆனால், வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஏராளமாக உள்ளனர். எனவே, வாக்காளர் அட்டைகள் அனைத்து மக்களுக்கு கிடைக்கும் வகையில், தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | SBI Alert: போலி செய்தியா, வங்கியின் செய்தியா என எப்படி கண்டுபிடிப்பது?

18 வயதுக்கு முன்பே விண்ணப்பிக்கலாம்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைபவர்களும்  வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இத்துடன் ஆண்டுக்கு 3 முறை வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. 

புதிய வாக்காளர்கள் தங்களை அடையாளம் காண பதிவு செய்யும் போது ஆதார் எண்ணை கொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பிறகு ஒவ்வொரு வாக்காளருக்கும் எபிக் கார்டு வழங்கப்படும். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், ஆகஸ்ட் 01 முதல் மார்ச் 31, 2023 வரை வாக்காளர் அடையாள அட்டையில் தங்கள் ஆதார் எண்ணைப் புதுப்பிக்கலாம். இதற்காக, புதிய படிவம் 6B நிரப்பப்படும்.

மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?

அக்டோபர் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம்

தேர்தல் ஆணையம் இனி ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை முன்கூட்டியே சேர்க்க குடிமக்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். இதற்காக, வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆண்டுக்கு நான்கு முறை ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

RP சட்டம்-1950 இன் பிரிவு 14B மற்றும் தேர்தல் விதிகளின் பதிவு 1960 இல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, வாக்காளர் அட்டை தயாரிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News