SBI Alert: போலி செய்தியா, வங்கியின் செய்தியா என எப்படி கண்டுபிடிப்பது?

SBI Alert: வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! வங்கி அனுப்புவதாக பல மோசடி செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத்தொகையும் காலியாகி விடக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2022, 11:38 AM IST
  • எஸ்பிஐ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடியைத் தவிர்ப்பதற்கான எளிய வழிகளை வழங்கியுள்ளது.
  • இந்த ஷார்ட்கோட்கள் (குறியீடுகள்) வங்கியின் செய்தியின் அடையாளமாகும்.
  • சைபர் மோசடி அதிகரித்து வருகிறது.
SBI Alert: போலி செய்தியா, வங்கியின் செய்தியா என எப்படி கண்டுபிடிப்பது?  title=

எஸ்பிஐ எச்சரிக்கை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வித எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது அனுப்புகிறது. தற்போதும் எஸ்பிஐ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடியைத் தவிர்ப்பதற்கான எளிய வழிகளை வழங்கியுள்ளது. வங்கி அனுப்புவதாக பல மோசடி செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத்தொகையும் காலியாகி விடக்கூடும். 

இந்த ஷார்ட்கோட்கள் (குறியீடுகள்) வங்கியின் செய்தியின் அடையாளமாகும்

எஸ்பிஐ -யிலிருந்து எந்த செய்தி வந்தாலும் அதில் SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB போன்ற தேவையான குறியீடுகள் இருக்கும் என்று எஸ்பிஐ ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது. இந்தக் குறியீடுகளைக் கொண்ட செய்திகளை நீங்கள் பெற்றால், அது வங்கியின் அதிகாரப்பூர்வ செய்தி என்று அர்த்தம்.

மேலும் படிக்க | டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு 

சைபர் மோசடி அதிகரித்து வருகிறது

வங்கி உங்களுக்கு எவ்வாறு செய்தி அனுப்புகிறதோ, அதே முறையைப் பின்பற்றி, சைபர் மோசடி செய்பவர்களும் உங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். இந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் வங்கியின் செய்தி என நம்பி விடுகிறார்கள். தங்கள் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பல விவரங்கள் கசிந்துள்ளன. எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும், ஓடிபி-யையும் வங்கி வாடிக்கையாளர்களிடம் கேட்காது. வங்கியிடமிருந்து எந்த நேரத்திலும் கெஒய்சி விவரங்கள் கேட்கப்படாது. எந்த வங்கியும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யும்படி வாடிக்கையாளர்களிடம்  சொல்லாது.

போலி செய்திகளை எவ்வாறு கண்டறிவது

வங்கியில் இருந்து வரும் செய்தி போலியானதா அல்லது உண்மையானதா என்பதை கண்டறிய வேண்டுமானால், பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1. வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் செய்திகளில் தவறுகள் இருக்காது. அதேசமயம் மோசடி செய்திகளில் பல தவறுகள் இருக்கும். இந்த போலி செய்திகளில் கிராமர் மிஸ்டேக்ஸ் அதாவது இலக்கண பிழைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

2.வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்புகின்றன, அனைவருக்கும் அனுப்பாது. பெரும்பாலும் உங்களுக்கு கணக்கு இல்லாத வங்கிகளிலிருந்தும் உங்களுக்கு செய்திகள் வருவதுண்டு. இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

3. வங்கியில் இருந்து செய்தி அனுப்பப்பட்டால், அனுப்புநரில் மொபைல் எண் காட்டப்படாது, அனுப்பிய வங்கியின் பெயரின் குறுகிய வடிவம் காட்டப்படும்.

எப்படி போலி செய்தி அனுப்பப்படுகிறது

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பான் எண்ணை கொடுக்கப்பட்ட இணைப்பில் புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களின் 'YONO' கணக்கு தடுக்கப்படும் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. YONO என்பது எஸ்பிஐ-இன் டிஜிட்டல் பேங்கிங் தளமாகும். செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள போலி இணைப்பு ஒரு எஸ்பிஐ பக்கத்திற்கு செல்லும். இதில், பயனர்கள் முக்கியமான தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள். பயனர்கள் தங்கள் விவரங்களை அதில் உள்ளிடும்போது, ​​அவர்களின் தகவல் ஹேக்கர்களை சென்றடைகிறது. ஹேக்கர்கள் பயனர்களின் மொத்த தொகையையும் காலியாக்குகிறார்கள். 

மேலும் படிக்க | ITR E Verification: 30 நாட்களுக்குள் செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News