மாநாட்டில் பங்கேற்க சென்ற நடிகை ரோஜா கைது

Last Updated : Feb 12, 2017, 11:02 AM IST
மாநாட்டில் பங்கேற்க சென்ற நடிகை ரோஜா கைது title=

தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ, நடிகையுமான ரோஜாவை போலீஸார் கைது செய்தனர்.

அமராவதியில் தேசிய மகளிர் நாடாளுமன்றம் என்ற பெயரிலான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பிலும், வரவேற்புக் குழுவிலும் ரோஜா உறுப்பினராக உள்ளார். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாதில் இருந்து விமானம் மூலம் விஜயவாடாவுக்கு ரோஜா நேற்று வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அங்கு காத்திருந்த போலீஸார் ரோஜாவை கைது செய்தனர். இதனால் ரோஜாவிற்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேசிய மகளிர் நாடாளுமன்ற மாநாட்டில் ரோஜா போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில் அவரைக் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் மாலையில் ரோஜா விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending News