ரஃபேல்: கால அவகாசம் கிடையாது. மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: SC உத்தரவு

ரஃபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2019, 03:22 PM IST
ரஃபேல்: கால அவகாசம் கிடையாது. மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: SC உத்தரவு title=

டெல்லி: ரஃபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் கட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆயினும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மத்திய அரசு அளித்த விவரங்கள் திரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகவும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும், பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். மேலும் விரைவில் விசாரணை தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்று மீண்டும் ரஃபேல் சீராய்வு மனு தொடர்பான விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், வரும் மே 6 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மே 4ம் தேதி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. கால அவகாசம் வழங்க முடியாது என மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

Trending News