இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்கள் அல்ல: சாக்‌ஷி மகராஜ்

தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவில், பாகிஸ்தானை விட அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் சிறுபாண்மையினர் அல்ல எனவும், பாஜக எம்பி சாக்‌ஷி மக்ராஜ் கூறியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2020, 04:16 PM IST
  • இந்தியாவில், பாகிஸ்தானை விட அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர் என்கிறார் சாக்‌ஷி மகராஜ்.
  • நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டு கோடியிலிருந்து 32 கோடியாக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.
  • நாட்டில் நிலங்களின் அளவு குறைந்து வருவதாகவும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும் கூறினார்
இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்கள் அல்ல: சாக்‌ஷி மகராஜ் title=

தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவில், பாகிஸ்தானை விட அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் சிறுபாண்மையினர் அல்ல எனவும், பாஜக எம்பி சாக்‌ஷி மக்ராஜ் கூறியுள்ளார்.

உன்னாவ் மாவட்டம் பைசவுன்ரா கிராமத்தில் வளர்ச்சி பணிகளை தொடக்கி வைத்த, ​​எம்.பி. சாக்ஷி மகாராஜ் சிறுபான்மை சமூகத்தினர் குறித்த மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.  இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தை நீக்க வேண்டும் என்றார். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டு கோடியிலிருந்து 32 கோடியாக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

நாட்டின் இஸ்லாமியர்கள் இனி சிறுபான்மையினர் அல்ல. மக்கள் தொகை சட்டம் (Population control Act) குறித்து கருத்து தெரிவித்த எம்பி சாக்‌ஷி மகராஜ், நாட்டில் நிலங்களின் அளவு குறைந்து வருவதாகவும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும் கூறினார். இதை மனதில் கொண்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். இதில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அரசாங்க சலுகைகளை இழக்க நேரிடலாம். அரசியல்வாதிகள் கூட தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ்  (Congress) அரசால் நாட்டை முன்னேற்ற முடியவிலை என்று கூறிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஆறு ஆண்டுகளில் அதைச் சதித்துள்ளார் என்றார். பாஜக அனைவரையும் உள்ளடக்கிய வலர்ச்சி என்ற வழியில் செயல்படுகிறது என்றார்.

விவசாயிகள் போராட்டம் (Farmers protest)  குறித்து கூறுகையில், நாட்டின் விவசாயிகள் வயல்களில் பணியாற்றி வருவதாகவும், காங்கிரஸ் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். நவாப்கஞ்ச் தொகுதியில் 82 கி.மீ நீளமுள்ள சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ பிரிஜேஷ் ராவத் தெரிவித்தார்.

ALSO READ | பிரதமர் மோடி புதுடில்லியில் உள்ள குருத்வாராவிற்கு சென்று குருதேஜ் பக்தூரை வணங்கினார்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News