டெல்லி: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

Last Updated : Jul 2, 2018, 08:58 AM IST
டெல்லி: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு! title=

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

கடந்த மே முதல் டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூலை 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போகும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் முன்கூட்டியே பள்ளிக்கு வந்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்ததால் மாணவ, மாணவிகள் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். விடுமுறை நாள் அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

Trending News