கொல்கத்தா கமிஷனர் விவகாரம்: சுப்ரீம் கோர்டில் நாளை விசாரணை!!

கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த விடாமல் தடுத்தது தொடர்பாக, சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 4, 2019, 02:26 PM IST
கொல்கத்தா கமிஷனர் விவகாரம்: சுப்ரீம் கோர்டில் நாளை விசாரணை!! title=

கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த விடாமல் தடுத்தது தொடர்பாக, சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து கமிஷனர் வீட்டுக்கு விரைந்த மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளார், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் எங்களால் என்று கூறினார்.

பின்னர், மெட்ரோ  சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். நேற்று இரவு தொடங்கப்பட்ட இந்த தர்ணா இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

மம்தாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தா விவகாரம் தொடர்பாக, சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்டில் மறுத்துவிட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஆதாரங்ககைளை நாளை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு சுப்ரீம் கோர்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்தார்.

Trending News