மனைவி கறந்தால் மட்டுமே மாடு பால் தருகிறது - போலீசில் புகார் அளித்த கணவன்!

தான் கறந்தால் மட்டும் பால் தராமல் தனது மனைவிக்கு மட்டும் பால் கொடுக்கிறது என போலீசில் வேதனையுடன் விவசாயி ஒருவர் புகாரளித்துள்ளார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 06:48 PM IST
மனைவி கறந்தால் மட்டுமே மாடு பால் தருகிறது - போலீசில் புகார் அளித்த கணவன்! title=

கர்நாடகா :தான் கறந்தால் மட்டும் பால் தராமல் தனது மனைவிக்கு மட்டும் பால் கொடுக்கிறது என போலீசில் வேதனையுடன் விவசாயி ஒருவர் புகாரளித்துள்ளார். சமீபகாலமாகவே காவல் நிலையங்களில் வினோதமான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  பென்சில் திருடிவிட்டான், பேனா திருடிவிட்டான் போன்ற பல வேடிக்கையான புகார்கள் எழுந்து வருகிறது.  அவை ஒரு புறம் கோவத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் வேடிக்கையானதாக இருக்கிறது.   இதுபோல தான் விவசாயி ஒருவர் பசுமாடு தனக்கு பால் தரவில்லை என போலீசில் புகாரளித்து நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ காதலியுடன் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு இறுதியாக சிறைக்கு சென்ற காதலன் !

கர்நாடக மாநிலத்திலுள்ள சிவமெக்கா மாவட்டத்தின் சாலிக்ராம் பகுதியை சேர்ந்தவர் ராமையா என்கிற விவசாயி.  இவர் சொந்தமாக சில மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.  விவசாயியான இவர் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பாலை பண்ணைகளில் விற்று வருமானம் ஈட்டி வருகிறார்.  இந்நிலையில் மாடு பால் கறக்க தொடங்கியதிலிருந்தே ராமையா பால் கறக்க சென்றால் பசுமாடு அவரை எட்டி உதைத்து விடுமாம்.  அதுவே இவரது ,மனைவி சென்று பால் கறந்தால் அந்த பசுமாடு அமைதியாக அவருக்கு மட்டும் பாலை கொடுக்குமாம்.  இவர் பலமுறை அந்த பசுமாட்டிடம் பாலை கறக்க முயன்று தோற்று போய் உதை வாங்கியது தன மிச்சம்.

இதனால் மன வேதனை அடைந்த விவசாயி ராமையா தான் வளர்த்து வந்த பசுமாடுகளை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.  பசுமாடுகளுடன் ராமையா வருவதை கண்ட போலீசார் அதிர்ந்து போய் விசாரித்தனர்.  அப்போது அவர் நான் வளர்த்து வரும் இந்த மாடுகள் நான் பால் கறந்தால் மட்டும் எனக்கு பால் தராமல், என் மனைவிக்கு மட்டும் பால் தருவதோடு என்னை எட்டி மிதித்து விடுகிறது.  அதனால் இவற்றின் மீது புகாரளிக்க வந்துள்ளேன் என்று கூறினார்.  இதனை கேட்ட காவலர்கள் ஒருவழியாக ராமையாவை சமாதானம் செய்து அவரது வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.  இதே போல சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது எருமை மாடு பால் கறக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ ’தேங்காய் உடைத்ததால் சாலையில் விரிசல்’ உ.பி. எம்.ஏல்.ஏ-வின் பகீர் குற்றச்சாட்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News